திருடிவிட்டு தப்பி சென்ற திருடன் கிணற்றில் வீழுந்து மாட்டிக்கொண்டார்!

அலவ்வ பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடன் திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் கிணற்றில் வீழ்ந்த மாட்டிக்கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்று நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிவிட்டு தப்பிச் செல்லும் சந்தர்ப்பத்தில் வீட்டு உரிமையாளரிடம் மாட்டிக்கொண்டார்.

வீட்டு உரிமையாளரிடமிருந்து தப்பிச்சென்ற போது வீட்டின் பின்புறம் வலையால் மூடப்பட்டிருந்த கிணற்றில் தவறி வீழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் அங்கு சென்ற பொலிஸார் ஏணியை வைத்து திருடனை மீட்டெடுத்து கைது செய்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply