இலங்கையில் எரிபொருள் விற்பனை – சீனாவின் சினோபெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என சீனாவின் சினோபெக் நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அண்மையில் ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இதனை தொடர்ந்து, சினோபெக் நிறுவனம் எரிபொருள் விற்பனை செய்வதற்கு வேறு வெளி நிறுவனங்களை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும், குறித்த தகவல்களை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ள சினோபெக் நிறுவனம் தமது வணிகத்திற்காக மூன்றாம் தரப்பினரை தொடர்பு கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தமது எரிவாயு நிலைய சேவை உரிமைகளை வேறு எந்த தரப்பினருக்கும் மாற்ற விரும்பவில்லை என்றும், தனது வர்த்தக நாமத்தின் நற்பெயரைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் சினோபெக் நிறுவனம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply