சகோதரியின் திருமண நாளில் உயிரை பலிகொடுத்த சகோதரன்!

தனது சகோதரியின் திருமண நிகழ்விற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 15 வயது மாணவன் ஒருவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஹந்தபாங்கொட, கொட்டிகல பிரதேசத்தை சேர்ந்த பிம்சர பிரபோத் ரணசிங்க என்ற மாணவனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சகோதரியின் திருமண நிகழ்வின் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மணமகனின் தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது குரன, பெவும் பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வாய்க்காலில் விழுந்துள்ளது.​

விபத்தில் படுகாயமடைந்த மாணவனும் மற்றைய நபரும் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply