முல்லைத்தீவில் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய போலிச் சாமியார் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் – முந்தையன்கட்டு, ஜீவ நகரில் சூனியத்தை நீக்குவேன் என கூறிப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையை சேர்ந்த குறித்த சாமியார், பில்லி- சூனியத்தை நீக்குவேன் என கூறி முந்தையன்கட்டு, ஜீவநகர் பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த சேர்ந்த இரு பெண்களுக்கு சூனியம் நீக்குவதாகக் கூறி ஜீவநகர் பகுதியிலுள்ள வீட்டுக்கு அழைத்து அங்கு குறித்த பெண்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

யுவதிகள் இது தொடர்பில் தமது பெற்றோரிடம் தெரியப்படுத்தியதையடுத்து, ஒட்டுசுட்டான் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டுக்கமைய ஒட்டுசுட்டான் காவல்துறையினர் போலி சாமியாரை கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் போலி சாமியார் குறித்த பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது.

சூனியம் நீக்குவேன் எனக் கூறி மதுபானம் மற்றும் கஞ்சா போன்றவற்றை கொடுத்து யுவதிகளை போலிசாமியார் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நபரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், ஒட்டுசுட்டான் காவல்துறையினர் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply