அபுதாபியில் தீ விபத்து: இலங்கைப் பெண் சாவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

குறித்த பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அபுதாபியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 6 பேர் உயிரிழந்தும் மேலும் பலர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுமுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், தீ விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply