உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோசி சேனநாயக்கா 2001-2004 இல் மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவியிலும் 2009-2010 இல் மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்நதோடு, 2015 ஆம் ஆண்டு குழந்தைகள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் அவர், பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.