கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு!

கந்தானை – வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து 84 வயதுடைய நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் முகம் மற்றும் கழுத்து பகுதி துணியொன்றினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் உயிரிழந்த நபர் தனியாக வசித்து வந்தமையும் பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் மகள் வியாழக்கிழமை (25) தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோதே அவரது தந்தை சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply