4 வயது சிறுமி பலி

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றதாக்க் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்தபோது அயல் வீட்டின் முன் விறகுடன் நின்ற லாண்ட்மாஸ்டர் வாகனத்தை செலுத்துநர் பின்னோக்கி எடுக்க முற்பட்டுள்ள போதே அதில் சிக்குண்டு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி வந்ததை அறியாமல் குறித்த நபர் வாகனத்தை பின்னோக்கி செலுத்தியபோது சில்லுக்குள் அகப்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply