இலங்கைக்கு 350 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விசேட சலுகைகள் அடங்கிய கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த கடனானது சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள கடன் வசதியுடன் தொடர்புடையதாகும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்கை அடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கடன் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply