மகாவலி ஆற்றில் முழ்கி மாணவன் பலி!

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்து நேற்று பிற்பகல் கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் கம்பளை கஹடபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய மாணவனே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கியபோது அயலவர்களால் காப்பாற்றப்பட்டு, ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கம்பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply