பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பான கலந்துரையாடல்

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைக் கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும்
சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கும் சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டங்களைக் கையாள்வதில் அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மே மாதம் 12 ஆம் திகதி கொழும்பில் வெளியிட்டது.

பிராந்திய மட்டத்தில் இவ்வழிகாட்டுதல்களை அறியப்படுத்துவதும் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்று இவ்வழிகாட்டுதலை மெருகேற்றுவதும் இக்கலந்துரையாடலின் நோக்கமாக இருந்தது.

You May Also Like

About the Author: digital

Leave a Reply