அரச வங்கியை உடைத்து திருட முயற்சி

பூட்டப்பட்டிருந்த அரச வங்கியின் கதவை உடைத்து கொள்ளையிட முயற்சி செய்தபோது வங்கியின் எச்சரிக்கை அவசர சத்த ஒலி எழுந்ததையடுத்து பொதுமக்கள் கூடியதையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலையில் மட்டக்களப்பு ஆரையம்பதியிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வங்கியை வங்கி முகாமையாளர் வழமைபோல நேற்று மாலை பூட்டிவிட்டு சென்ற நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கொள்ளையர்கள் வங்கியின் பிரதான கதவை அலவாங்கினால் உடைத்து அதன் பின்னர் கண்ணாடி கதவை உடைத்து உள் நுழைய முயற்சித்தாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொள்ளையடிக்க கொண்டுவந்த அலவாங்கு, தோல் பை மற்றும் செருப்பு என்பவற்றை மீட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply