மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம்

மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி, சூரியகந்த பிரதேசத்தில் உள்ள கபுகந்த சனசமூக மண்டபத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கொலன்னாவைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த விதம் இதுவரை இனங்காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

T03

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply