காலி கடற்கரையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு!

காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காவல் துறையினரால் நேற்று(01) மீட்கப்பட்டுள்ளது.

35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதோடு குறித்த பெண்ணின் சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்போது கராபிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply