கனடாவில் இலங்கை சிறுவனை காணவில்லை

கனடாவின் தெற்கு வின்னிபேர்க் என்ற பிரதேசத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

கடந்த 24ஆம் திகதி வகுப்புக்கு சென்று அங்கிருந்து வெளியேறிய பின்னரே அவரை காணவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து சிறுவனை தேடும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த சிறுவன் இறுதியாக கடந்த 24 ஆம் திகதி காலை ஃபோர்ட் ரிச்மண்ட் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதோடு, தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் காவல் சேவையின் காணாமல் போனோர் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply