யாழில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு பொதுக்கூட்டமும், வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில்  சங்கானையில், இன்று காலை 8.30 மணியளவில், இடம்பெற்றது.

சங்கானை பிரதேச கலாசார மண்டபத்தில் ஆரம்பமான நடைபவனி வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவு பெற்றதுடன் சங்கானை பிரதேச செயலகம் முன்பாக பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத், வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரேமினி, வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply