நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நாட்டின் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டியன பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள போன்ற பிரதேச மக்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

T02

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply