வீட்டு உரிமையாளரை கொன்று உடைமைகள் கொள்ளை!

மதுரட்ட பிரதேசத்தின் கோபிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இறந்தவரின் மனைவி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் இவ் வயோதிபர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

அச் சமயத்திலேயே கை, கால்கள் கட்டப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர், அவரது வீட்டில் காணப்பட்ட உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply