தடம் புரண்டது ரயில் – மலையக தொடருந்து சேவை பாதிப்பு

ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே ரயில் இன்று (4) கடிகமுவ மற்றும் ரம்புக்கன ரயில் நிலையங்களுக்கிடையில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply