ஆப்கானிஸ்தான் பாடசாலை மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம்!

ஆப்கானிஸ்தானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக சவதேச ஊடகங்களில் செய்திகள் வெளியகியுள்ளன.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான்களின்கைக்கு சென்றது முதல் பெண்களுக்கன உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வரும் நிலையிலேயே தற்போது இந்த கொடூர சம்பவமும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆப்கானிஸ்தனின் வடக்கு பகுதியில்  80 பாடசாலை மணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தாலிபான்களின் கையில் கடந்த 2021ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சென்றதில் இருந்து பெண்களுக்கான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

பெண்கள் பெரும்பாலான பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர், பொது இடங்களுக்கு தனியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அத்துடன் பெண்கள் 6ம் வகுப்பிற்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பெண்களின் எதிர்காலம் பெரும் கேள்விக் குறியாகியுள்ளது. இவ்வாறான நிலையில், தாலிபான் அரசிடம் ஐ.நாவும் தொடர்ந்து பெண்கள் கல்வி உரிமை குறித்து அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையிலேயே வடக்கு ஆப்கானிஸ்தானின் சார்-இ-புல் மாகாணத்தின் சங்கராக் மாவட்டத்தில் உள்ள நஸ்வான்-இ-கபோத் ஆப் பெண்கள் பாடசாலை மற்றும் நஸ்வான்-இ-ஃபைசாபாத் பெண்கள் பாடசாலையில் உள்ள  80 பள்ளி சிறுமிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நஸ்வான்-இ-கபோத் ஆப் பெண்கள் பாடசாலையில் மட்டும் 60 சிறுமிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நஸ்வான்-இ-ஃபைசாபாத் பெண்கள் பாடசாலையில் 17 சிறுமிகள் வரை  பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரண்டு பாடசாலைகளும் ஒரே பகுதியிலேயே அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவிகளும் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டதையடுத்து, தற்போது நலமுடன் இருப்பதாக அந்நாட்டு கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறன நிலையில், மாணவிகளுக்கு எவ்வாறு விஷம் வைக்கப்பட்டது என்ற தகவலை அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply