தீ விபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய கர்ப்பிணி- அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் பாடசாலை பேருந்து சேவையில் ஓட்டுனராகப் பணி புரியும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்துத் தீ விபத்திலிருந்து 38 பாடசாலை மாணவர்களை காப்பாற்றியுள்ளார்.

சம்பவ தினத்தன்று,பேருந்தில் பாடசாலை மாணவர்களை அழைத்துச் சென்றபோது, பேருந்தில் புகை வரத்தொடங்கியதைக் கண்ட குறித்த பெண்,பேருந்தை நிறுத்திவிட்டு உடனடியாக பாடசாலை மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கி காப்பாற்றிய சில வினாடிகளில் பேருந்து தீப்பற்றி எரிந்தது.

இதனையடுத்து, துணிச்சலுடன் செயற்பட்ட இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply