ஹைதி நாட்டில் அதிகரித்த வெள்ளம் – 42 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வெள்ளத்தில் சிக்குண்டு, 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை முதல் பெய்துவரும் தொடர் கனமழையினால்,வீடுகளும் பயிர்ச்செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்து சேதத்திற்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழையினால் சில பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், ஏறக்குறைய 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 ஆயிரம் பேர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply