மட்டக்களப்பு இளைஞன் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆலயத் திருவிழாவுக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர்கள் வல்வெட்டித்துறைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

ஆலய தீர்த்தத் திருவிழா முடிவடைந்த பின்னர் மூன்று இளைஞர்கள் கேணியில் குளித்துக் கொண்டிருந்த போதே ஒரு இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மரண விசாரணையை வல்வெட்டித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராஜா நேற்று மேற்கொண்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply