கஜேந்திரகுமாரின் கைதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் கைது செய்யப்பட்டமை நியாயமன செயல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் முன்னர், அவரை கைது செய்தமை கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அது வேறு விடயம்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அமர்வில் கலந்து கொள்வதற்கு முன்னர் கைது செய்தமையானது, அவருக்குரிய நாடாளுமன்ற சிறப்புரிமைகள் மீறப்பட்டதாகவே தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இந்த விடயம் தொடர்பில், முன்னர் தெளிவான ஆணையொன்றை வழங்கியமையை கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்த பின்னர், அவரை நாடாளுமன்றம் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால்  பாதுகாப்புத்துறையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க விரும்பவில்லையென தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply