கலஹாவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து- நால்வர் காயம்

கண்டியின், கலஹா, டெல்தோட்டா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

உணவகத்தினுள் சமையல்காரர்கள் சமைத்துக் கொண்டிருந்த போதே, தீ விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உணவகத்தின் ஊழியர்கள் நால்வர்,  காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த குறித்த ஊழியர்கள், கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

எனினும் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயுக் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிகப்பதோடு, விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply