தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு பிணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர் மற்றும் உதய சிவம் ஆகியோரின் வழக்கு மிதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதவான் குறித்த இரண்டு சந்தேகநபர்களுக்கும் பிணை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில், இருவரும் 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக, சட்டத்தரணி சுகாஸ் ஊடகங்களிற்குத் தெரிவித்தார்.

கடந்த 03 ஆம் திகதி, வடமராட்சி கிழக்குத் தளையடி, பொது விளையாட்டரங்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில், தம்மை உறுதிப்படுத்தாத நபர்கள் புகைப்படம் எடுத்தபோது, அவர்கள் யார்? என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரது ஆய்வு உத்தியோகத்தர் வினவியபோது, அவர்கள் தங்களுடைய அடையாளங்களை நிரூபிக்க தவறிய வேளையில், அவர்களை தமது அடையாளத்தை நிரூபித்துவிட்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றிருந்தனர்.

இவ்வாறான பின்னணியிலே, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, கடந்த 05 ஆம் திகதி அதிகாலை மருதங்கேணி பொலிஸரால், குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதேசமயம், மற்றுமொரு சந்தேக நபரான உதய சிவமும் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், இருவரையும் 7 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply