ஊடக அடக்கு முறையால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – சாணக்கியன் எச்சரிக்கை!

ஊடகங்களை அடக்கும் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதன் மூலம் இந்த நாடு அழியப்போகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற ஊழல்களை வெளிகொண்டு வந்தது ஊடகங்கள் மட்டுமே.

இந்நிலையில் ஊடகங்களை அடக்கும் வகையில் ஊடக சட்ட மூலம் ஒன்றை கொண்டு வருவதனால் இந்த நாட்டுக்கு அழிவுகாலம் நெருங்கிவிடும்.

நாட்டில் இடம்பெற்ற உரப் பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் பிரச்சினை பற்றிய சகல விடயங்களையும் வெளிகொண்டு வந்தது ஊடங்கள் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள் இந்த நாடு அழிவு பாதையில் செல்வதை விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply