பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த ஆண் கான்ஸ்டபிள் கைது

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், பதவிய பொலிஸில் பணிபுரிவதோடு, ஏற்கனவே திருமணமானவர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டு நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியபோது, இரு கான்ஸ்டபிள்களும் காதலித்துள்ளனர்.

குறித்த பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்து கொள்வதாக ஆண் கான்ஸ்டபிள் உறுதியளித்து, ஒரு இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் கான்ஸ்டபிள் வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply