புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் திருட்டு – மூவர் கைது

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவல்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் நிஷாந்தன் மற்றும் ஹரிதாஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சின்ன மடு பகுதியில் வைத்து இரண்டு சந்தேக நபர்களும், நாரந்தனை பகுதியில் வைத்து ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது , நாரந்தனை மத்தி பகுதியில் உள்ள சுகாதார வைத்திய பிரிவிலிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply