சகோதரனுக்காக பரீட்சை எழுதிய மற்றொரு சகோதரன் கைது

இலங்கையில், நேற்றுடன் நடைபெற்று முடிந்த O/L பரீட்சையில் தனது சகோதரருக்காக பரீட்சைக்கு தோற்றிய மற்றொரு சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தெனியாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தெனியாய, பல்லேகம மகா வித்தியாலயத்தின் பரீட்சை நிலையத்தில் தனது சகோதரனுக்காக பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

இதனையடுத்து, பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

தெனியாய ஏனசல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply