இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!

நாட்டு மக்களின் கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது, அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முயற்சிகளின் ஒரு அடிப்படையாக தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply