குரங்கம்மை நோய் தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை

இந்த வார தொடக்கத்தில், இரண்டு குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய தாய் மற்றும் மகளுக்கு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குரங்கம்மை நோய்க்கான சோதனை செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தொற்று நோய் மருத்துவமனைக்கு (IDH) மாற்றப்பட்டனர்.

இதன் மூலம் இலங்கையில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) தொற்றுநோயை உலகளாவிய அவசரநிலை என்று அறிவித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, இலங்கையில், கடந்த நவம்பர் 2022 இல் முதல் இரண்டு வழக்குகள் அடையாளம் காணப்பட்டன.

மனிதனிலிருந்து மனிதனுக்கு குரங்கம்மை நோய் பரவுவது மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்று சுகாதார அமைச்சின் பதில் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே கேட்டுக்கொண்டார்.

குரங்கம்மை நோய் அறிகுறிகள் பொதுவாக இரண்டு முதல் மூன்று வாரங்கள் நீடிக்கும் எனவும், பொதுவாக வலி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் போன்ற ஆதரவான கவனிப்புக்கள் மூலம் தானாகவே போய்விடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply