தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு

மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை மரங்கள் அடர்ந்து காணப்பட்ட பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் மண் திட்டும் வாழை தோப்புகளும் சரிந்து விழுந்ததுள்ளன.

இதனால் மஸ்கெலியா தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் அணைக்கட்டு பகுதியில் இருந்து நீரை பெற்றுகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நீர் வடிகால் திணைக்கள அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று அங்கு பார்வையிட்ட பின்னர், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply