கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்ட சந்தேக நபர்!

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா இம்மாதம் 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை ஒட்டி தினமும் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்திற்கிடமான முறையில், நபர் ஒருவர் உள்நுழைவதற்கு முயற்சித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தளை அகலவத்தையை நிரந்தர வதிவிடமாகக் கொண்டதோடு, மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் 46 வயதான இம்தியாஸ் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என கடற்கரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை ஆராதனைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் சந்தேக நபர் தேவாலயத்திற்குள் பிரவேசிப்பதற்கு முற்பட்ட போது, பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், துதிப்பாடல்களை கேட்க வேண்டும் என்பதற்காக தேவாலயத்துக்குள் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடம் இருந்து இரண்டு தேசிய அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply