வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஏழு கலால் அதிகாரிகள் கைது

காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட கலால் திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜென்டும், ஐந்து பொலிஸ் கான்ஸ்டபிள்களும் உள்ளடங்குவதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 05 ஆம் திகதி, கலால் திணைக்கள அதிகாரிகள், காலி முகத்திடலில் உள்ள உணவகம் ஒன்றில் தகராறில் ஈடுபட்டதுடன், பீட்சா விற்பனை நிலையத்தின் தலைமை சமையல்காரரை கொடூரமாக தாக்கியிருந்தனர்.

காயமடைந்த சமையல்காரரும், கலால் திணைக்கள அதிகாரி ஒருவரும்  கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, கலால் திணைக்களம், கலால் அதிகாரிகள் குழுவிற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது.

15 பேர் கொண்ட குறித்த குழு, கலால் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என்பதும், சம்பவத்தின் போது அவர்கள் மதுபோதையில் இருந்தமையும் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply