வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர்.

கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலியாகிய ஆணின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் தொடர்பான விடயங்கள் இன்னமும் அடையாளம் காணப்படாத நிலையில், விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணையை வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply