வலி.வடக்கில் 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படவுள்ள தமிழர் காணிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையிலேயே மிக விரைவில் காணிகள் அனைத்தும் உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது.

மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்எ என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply