கப்பலைக்கடத்த முற்பட்ட மர்ம குழு – இத்தாலிய கடற்பரப்பில் ஏற்பட்ட பதற்றம்!

துருக்கியில் இருந்து பிரான்ஸ் நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பலை 15 பேர்கொண்ட மர்ம குழு ஒன்று கடத்த முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த கடத்தல் சம்பவம் இத்தாலிய சிறப்பு படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி குறித்த சரக்கு கப்பலை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட குழுவினர் எந்த நாட்டவர்கள் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

கடத்தல் முயற்சி நடந்த வேளை கப்பல் இத்தாலிய கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கப்பல் மாலுமி துருக்கி அதிகாரிகளுக்கு உதவி கேட்டு தகவல் வழங்கியுள்ளார். அவர்கள் இத்தாலிய நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தகவல் வழங்கியுள்ளனர்.

உடனடியாக இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் துரித நடவடிக்கைகளுக்கு உத்தரவிட, இத்தாலிய சிறப்பு படையினர் சரக்கு கப்பலுக்குள் நுழைந்துள்ளனர்.

7 மணி நேர நடவடிக்கைகளுக்கு பின்னர் இத்தாலிய படையினர் கப்பலை  மீட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை,15 பேர்கள் கொண்ட கடத்தல் குழுவினரையும் கைது செய்துள்ளனர். சரக்கு கப்பல் தற்போது நேபிள்ஸ் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, கைதானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு இத்தாலிய பாதுகாப்பு அமைச்சர் நேரடியாக பதில் கூற மறுத்துள்ளார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply