அமெரிக்காவாழ் இலங்கையர்களை சந்தித்தார் ஜூலி சங்..!

அமெரிக்காவாழ் இலங்கையர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

வொஷிங்டனில் உள்ள இலங்கைத்தூதரகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் அமெரிக்காவுக்கான இலங்கைத்தூதுவர் மஹிந்த சமரசிங்கவினால் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சந்திப்புக் குறித்துக் “இவ்வாரம் நான் மீண்டும் வொஷிங்டனுக்கு வருகைதந்திருக்கின்றேன். இதன்போது முதலாவதாக அமெரிக்காவில் வாழும் இலங்கைப்பிரஜைகளைச் சந்தித்தேன். இருநாடுகளுக்கு இடையிலான 75 வருடகால நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினேன்” தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply