350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நீர்ப்பம்பிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு, கல்லடி சன்சைன் கிறான்ட் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இணை செயலாளர் பிரசாந்தன், மாகாண பிரதித் திட்டப்பணிப்பாளர் கே.கருணாகரன் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply