பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கும், இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களும் அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தத்தமது நாடுகளில் வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பயன்படுத்துவதற்கான ஒரு இணக்கப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டால் பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்தார்.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற முறையின் கீழ் இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply