மொனராகலையில் சோகம்..! தந்தையும் மகனும் யானை தாக்கி பலி

மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருந்த தந்தையும், மகனும் யானை தாக்கி நேற்று உயிரிழந்துள்ளனர்.

49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனுமே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இருவரினதும் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply