நாட்டை வந்தடைந்தது உரக் கப்பல்..!

ஓமானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 22 ஆயிரத்து 500 மெற்றிக் டன் யூரியா உரம் தாங்கிய கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

அந்த உரத்தை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல், கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக குறித்த உரத்தை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply