அஸ்வினை தேர்வு செய்யாதது ஏன்? சச்சின் கேள்வி

லண்டன் கெனிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இந்தியாவை 209 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அஸ்வினை இந்திய அணியின் விளையாடிய 11 வீரர்களுக்குள் ஏன் தேர்வு செய்யவில்லை? எனவும் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹெட் இருவரும் ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக அமைக்க முதல் நாளிலேயே உறுதியான அடித்தளத்தை அமைத்தனர்.

ஆட்டத்தில் நிலைத்திருக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் துடுப்பெடுத்தாட வேண்டியிருந்தது. ஆனால், அவர்களால் முடியவில்லை.

இந்தியாவிற்கு சில நல்ல தருணங்கள் இருந்தன. ஆனால், தற்போது உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளராக இருக்கும் அஸ்வினை அணியின் 11 வீரர்களுக்குள் தேர்வு செய்யாதது ஏன்? என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவுஸ்திரேலியாவின் முதல் 8 துடுப்பாட்ட வீரர்களில் 5 இடது கை வீரர்கள் இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது, என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply