அதிகரிக்கிறது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலை!

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 40 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அகில இலங்கை லொத்தர் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷாந்த  மரம்பகே தெரிவித்தார்.

அதன்படி, இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலை இனிவரும் காலங்களில் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுமென, தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply