பிரித்தானிய சிறுமி பிரான்சில் சுட்டுக் கொலை

பிரான்ஸில் தமது வீட்டுத்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த பிரித்தானிய குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.,

அயலவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சிறுமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலை பிரித்தானியாவில் உள்ள செயிண்ட்-ஹெர்போட் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் சிறுமியின் பெற்றோர் காயமடைந்துள்ளதுடன்,  தந்தைக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த குடும்பத்திற்கு உதவி வழங்குவதற்கு பிரித்தானிய அரசு முன்வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த 71 வயதுடைய நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் அவரது மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் குறித்த நபரும் சரணடைந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply