கதிர்காம உற்சவம் காரணமாக 3 பாடசாலைகளுக்கு விடுமுறை

கதிர்காமம் எசல பெரஹெர விழா காரணமாக கதிர்காமத்தில் உள்ள மூன்று பாடசாலைகள் ஜூன் 19 முதல் ஜூலை 04 4ஆம் திகதி வரை மூடப்படும் என தனமல்வில வலயக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி கதிர்காமம் தேசிய பாடசாலை, செல்ல கதிர்காமம் மகா வித்தியாலயம் மற்றும் தெட்டகமுவ வித்தியாலயம் என்பன ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 04ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என தனமல்வில வலயக் கல்விப் பணிப்பாளர் புத்திக கருணாதாச தெரிவித்துள்ளார்.

இதேவேளை கதிர்காமம் எசல பெரஹெரா எதிர்வரும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி மாணிக்க கங்கையில் நீர் வெட்டும் நிகழ்வுடன் நிறைவுபெறவுள்ளது.

பெரஹெரா திருவிழாவின் போது விசேட கடமைகளுக்காக வருகை தரும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்கே மேற்படி பாடசாலைகளின் கட்டிடங்கள் இலங்கை பொலிஸாரால் கோரப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த காலப்பகுதியில்  மூன்று பாடசாலைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கருணாதாச இதன்போது தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply