ரணில் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டை கண்டிக்கும் ஜே.வி.பி!

நாட்டு மக்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி அவர்களின் ஆர்ப்பாட்டங்களை தடை செய்ய அரசாங்கம் மேற்கொள்ளும் தந்திரமான வழிமுறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மக்கள் தமது கஷ்டங்களை தாங்கிக்கொள்ள முடியாமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தும் போது, பல்வேறு தடைகளை விதிப்பது ஜனநாயக விரோத செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால், அதனை உடனடியாக நிறுத்தி, நாட்டில் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்த இடமளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த கோரிக்கையை விடுப்பதில் பயனில்லை.

இதனால், மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்குமாறும் அதற்கு தடைகளை விதிக்க வேண்டாம் எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் எனவும் ரில்வின் சில்வா கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply