பேருந்துகளுக்கிடையிலான போட்டியால் இளைஞன் படுகாயம்!

யாழில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து ஒன்றினை தனியார் பேருந்து ஒன்று முந்தி செல்வதற்கு முற்பட்ட வேளையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தனியார் பேருந்து அதி வேகமாகப் பயணித்ததன் காரணமாக பேருந்தின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply