கடுமையாக சாடிய ரணில் – பதவி விலகலை அறிவித்த தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் தனக்குக் கிடைத்துள்ளதாகவும், அதில் பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தொல்பொருள் இடமொன்றுக்கு காணிகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பணிப்பாளர் நாயகத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.

இதனைத் தொடர்தே, குறித்த பதவி விலகல் கடிதம் பணிப்பாளர் நாயகத்தால்  அனுப்பிவைக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply